NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Monday, June 1, 2009

உன்னால்

உன் நினைவு நீறாவி ஆககூடாது
என்பதால்
உன் நிழலையும் படம்பிடித்தேன்
உன்னுடன் தினம் வாழ
நிஜ வாழ்வையும் கணவலையாய்
கடந்தேன்
சத்தம் இல்லாமல் சுவாசித்தேன்
உயிர் துடிப்பையும் உன் சங்கீதம்
ஆக்க
இன்று
கண்ணீருடன் பர்க்கிறேன் நான்
காகிதம் போல் கசக்கி எறிய பட்ட
என்னை ...

என்றும் நீ என்னோடுதானென்று

சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது

நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது

கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன

பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது

ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன

கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது

நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்

வருமையும் சொன்னது
"என்றும் நீ என்னோடுதானென்று"

காதல் வடுக்கள்!!!

நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!