NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Tuesday, May 26, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

Love

Love
Isn't winning someone but loosing
Urself to someone.
When U r LOVED by someone its not
due to the excellence of Ur
mind but due to the purity of Ur heart..

கொள்ளாதே ...

நீ வேண்டாம் உன் காதல் போதும்
நான் அதில் என்னை கரைத்துக் கொள்வேன்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு போதும்..

மௌனம் அழகுதான் உனக்கு
அதனால் எப்போதும் அழுகைதான் எனக்கு

கொஞ்சம் சிரிக்கலாமே
உன் கத்திப் பார்வையினால்

உன் கண்கள்

உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?

அழகு

எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!

கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..