NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Saturday, May 23, 2009

காதல் கண்னீர்

உன் கண்களில்
நான் காதலாக குடியேறினேன் ......
நீ கண்ணீராக
என்னை வெளியேற்றினாய் .......

உன் வானத்திற்கு
நான் மேகமாக வந்தேன் ......
நீ மழையாக
என்னை கீழே தள்ளினாய் .....

உன் உள்ளங்கைக்கு
பனித்துளியாக வந்தேன் .....
நீ வெயிலாக
என்னை மறைய் செய்தாய் .....

உன் உயிருக்குள்
இதயமாக வந்தேன் .....
என் துடிப்பையே
நிறுத்தி விட்டாய் .....


நீ என்னை விட்டு செல்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாய் ....
ஆம் ! முழுவதுமாக உன்னை என்னிடம் விட்டு விட்டு தான் செல்கிறாய் .....

காதலிக்க வேண்டும் . .

காதலிக்க வேண்டும் . . .
காமத்தின் சாரத்திற்காக அல்ல,
கவிதையின் ஈரத்திற்காக. . .

காதலிக்க வேண்டும். . .
கன்னித் தமிழில்,
கவிதைகளை பின்னி எடுக்கும்
வித்தையின் வித்திற்காக . .
அதில் விளைந்திடும் முத்திற்காக. . .

காதலிக்க வேண்டும். . .
மாற்றத்தின் மாட்சிமைக்கு,
அடங்காமல்,
மகிழ்ந்தாடும் கவிதைகளுக்கு,
கர்த்தா. . .
இந்த காதல் தானே,
அதன் ஆளுமைக்காக. . .

காதலிக்க வேண்டும். . .
வளம் பெற்ற காதலில் தானே,
கவிதைகள் பலம் பெறுகின்றன. . .
என் கவிதைகளின் எழுச்சிக்காக . . .

காதலிக்க வேண்டும் . . .

காதலிக்க வேண்டும். . .