NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Tuesday, December 2, 2008

நீ எந்தன் பக்கம் வந்தால்

நீ எந்தன் பக்கம் வந்தால்
வாழ்வெந்தன் பக்கம்
உன் கண்பார்வை நிதம் இருந்தால்
வாழ்விங்கு சொர்க்கம்

பணம் வரலாம்,
புகழ் வரலாம்,
பல செல்வம் உடன் வரலாம்
உன் இருப்பு அது வேண்டும்,

இதன் இன்பம் உணர்ந்திடலாம் உன் பேச்சு,
உன் சிரிப்பு,
உன் கோபம்,
உன் செய்கை
உன் ஸ்பரிசம்,
இவை வேண்டும்,

உன் காதல் இணை வேண்டும்
கலங்காதே என் கண்ணே,
வழி உண்டு நம் முன்னே நண்பர்கள் இங்குண்டு,
துணை நிற்பார் நம் பின்னே ஆயிரம் பேர் பார்த்ததுண்டு,
உன் போன்று ஒன்றில்லை
உன் இதயம் காணாத பொருளொன்றும் என்னில்லில்லை

உன் மனது நான் அறிவேன்
,உன் வலிகள் நான் உணர்வேன்
உன்னோடு நான் இருப்பேன்,
உன் கவலை நான் களைவேன்.

வருங்கால நாட்கள் யாவும் நாம் காணும் தேர்வு நாட்கள்
சங்கடங்கள் சந்திப்போம்,
சலனங்கள் எதிர் கொள்வோம்
நம் அன்பின் சக்தி கொண்டு
இவை யாவும் சுட்டெரிப்போம்

சம்சார சாகரத்தை காதல் கொண்டு கடந்திடுவோம்
கண் மூடி மனம் திறந்து,
சிந்தனை செய் ஒரு நிமிடம்
நான் சொல்லும் வாதங்களை கேட்டுப்பார்
உன் மனதிடம் தெளிவோடு கண் திறந்து
என் கரத்தை பற்றிக்கொள்
என் தோளோடு துணை இருந்து
என் வாழ்வை பகிர்ந்துக்கொள்

1 comment:

  1. நீ எந்தன் பக்கம் வந்தால்
    வாழ்வெந்தன் பக்கம்
    உன் கண்பார்வை நிதம் இருந்தால்
    வாழ்விங்கு சொர்க்கம்

    பணம் வரலாம்,
    புகழ் வரலாம்,
    பல செல்வம் உடன் வரலாம்
    உன் இருப்பு அது வேண்டும்,

    இதன் இன்பம் உணர்ந்திடலாம் உன் பேச்சு,
    உன் சிரிப்பு,
    உன் கோபம்,
    உன் செய்கை
    உன் ஸ்பரிசம்,
    இவை வேண்டும்,

    உன் காதல் இணை வேண்டும்
    கலங்காதே என் கண்ணே,
    வழி உண்டு நம் முன்னே நண்பர்கள் இங்குண்டு,
    துணை நிற்பார் நம் பின்னே ஆயிரம் பேர் பார்த்ததுண்டு,
    உன் போன்று ஒன்றில்லை
    உன் இதயம் காணாத பொருளொன்றும் என்னில்லில்லை

    உன் மனது நான் அறிவேன்
    ,உன் வலிகள் நான் உணர்வேன்
    உன்னோடு நான் இருப்பேன்,
    உன் கவலை நான் களைவேன்.

    வருங்கால நாட்கள் யாவும் நாம் காணும் தேர்வு நாட்கள்
    சங்கடங்கள் சந்திப்போம்,
    சலனங்கள் எதிர் கொள்வோம்
    நம் அன்பின் சக்தி கொண்டு
    இவை யாவும் சுட்டெரிப்போம்

    சம்சார சாகரத்தை காதல் கொண்டு கடந்திடுவோம்
    கண் மூடி மனம் திறந்து,
    சிந்தனை செய் ஒரு நிமிடம்
    நான் சொல்லும் வாதங்களை கேட்டுப்பார்
    உன் மனதிடம் தெளிவோடு கண் திறந்து
    என் கரத்தை பற்றிக்கொள்
    என் தோளோடு துணை இருந்து
    என் வாழ்வை பகிர்ந்துக்கொள்

    ReplyDelete