NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Friday, August 21, 2009

தனிமை...

எப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கும்
ஏனென்றால்...
தப்பாமல் வந்து என்னைச் சந்தோசப்படுத்துபவன் நீ
எந்நாளும் என் மேல் இரக்கப்படுபவனும் நீ
காதலன் எனச்சொல்லி உன்னை களங்கப்படுத்தமாட்டேன்
ஆனாலும் உன்னோடு ஒட்டி இருப்பதனால்
'அரைலூஸ்' என்றும் என்னை அழைப்பார்கள்
வீட்டிலுள்ளோர்

உன் கையைப் பிடித்துத்தான் நான்
பல உணர்வகளோடு கலந்திருக்கிறேன்
இதுவரை அனுபவித்திராத பல இன்பத்தையும்...
துன்பத்தையும்...
நீ தான் எனக்குக்
காட்சிப்படுத்தினாய் என் முதல் தோழன்
தனிமையே நீ தானே....

ஞாபகங்கள்

கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான் கண்ணயர்ந்தேன்.................... அதையும் தாண்டி உதைக்கின்றன உண் ஞாபகங்கள்...............

உறங்காமல் நான்

உறங்கவிடமல் நீ...........................!!!!!!!!!!

Tuesday, July 21, 2009

சுழற்சி

நீ
எடுக்கும்போது தவறவிட்டவை
அள்ளும்போது சிந்தியவை
பயனில்லையென எறிந்துபோனவை
யாவையும்
சேமித்துவைத்திருக்கிறேன்
இந்த மலையடிவாரத்தின்
நீரோடைக்கரையில்
நந்தவனங்களான
குடிலில்.

பூமி உருண்டையென
நிரூபணமாயிருப்பதால்
நீயும் திரும்புவாய்
ஒருநாள்
உன் நிராகரிப்பை
நிராகரித்து.

உதவி

தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!

Monday, June 1, 2009

உன்னால்

உன் நினைவு நீறாவி ஆககூடாது
என்பதால்
உன் நிழலையும் படம்பிடித்தேன்
உன்னுடன் தினம் வாழ
நிஜ வாழ்வையும் கணவலையாய்
கடந்தேன்
சத்தம் இல்லாமல் சுவாசித்தேன்
உயிர் துடிப்பையும் உன் சங்கீதம்
ஆக்க
இன்று
கண்ணீருடன் பர்க்கிறேன் நான்
காகிதம் போல் கசக்கி எறிய பட்ட
என்னை ...

என்றும் நீ என்னோடுதானென்று

சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது

நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது

கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன

பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது

ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன

கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது

நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்

வருமையும் சொன்னது
"என்றும் நீ என்னோடுதானென்று"

காதல் வடுக்கள்!!!

நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!

Tuesday, May 26, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

Love

Love
Isn't winning someone but loosing
Urself to someone.
When U r LOVED by someone its not
due to the excellence of Ur
mind but due to the purity of Ur heart..

கொள்ளாதே ...

நீ வேண்டாம் உன் காதல் போதும்
நான் அதில் என்னை கரைத்துக் கொள்வேன்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு போதும்..

மௌனம் அழகுதான் உனக்கு
அதனால் எப்போதும் அழுகைதான் எனக்கு

கொஞ்சம் சிரிக்கலாமே
உன் கத்திப் பார்வையினால்

உன் கண்கள்

உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?

அழகு

எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!

கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Sunday, May 24, 2009

வாழ்க்கை

வாழ்க்கை என்னும் கூட்டிலே .................
சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ...........

தாலாட்டு



பொன்னெடுத்து நிறமெழுதி
பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

அறிவுக்குச் சூரியனாய்
அழகுக்குச் சந்திரனாய்
பொறுமைக்கு பூமியாய்
புகழுக்குப் பிறந்தவளாய்
வறுமைக்கு வள்ளலாய்
வீரத்துக்கு விஜயனாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

Saturday, May 23, 2009

காதல் கண்னீர்

உன் கண்களில்
நான் காதலாக குடியேறினேன் ......
நீ கண்ணீராக
என்னை வெளியேற்றினாய் .......

உன் வானத்திற்கு
நான் மேகமாக வந்தேன் ......
நீ மழையாக
என்னை கீழே தள்ளினாய் .....

உன் உள்ளங்கைக்கு
பனித்துளியாக வந்தேன் .....
நீ வெயிலாக
என்னை மறைய் செய்தாய் .....

உன் உயிருக்குள்
இதயமாக வந்தேன் .....
என் துடிப்பையே
நிறுத்தி விட்டாய் .....


நீ என்னை விட்டு செல்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாய் ....
ஆம் ! முழுவதுமாக உன்னை என்னிடம் விட்டு விட்டு தான் செல்கிறாய் .....

காதலிக்க வேண்டும் . .

காதலிக்க வேண்டும் . . .
காமத்தின் சாரத்திற்காக அல்ல,
கவிதையின் ஈரத்திற்காக. . .

காதலிக்க வேண்டும். . .
கன்னித் தமிழில்,
கவிதைகளை பின்னி எடுக்கும்
வித்தையின் வித்திற்காக . .
அதில் விளைந்திடும் முத்திற்காக. . .

காதலிக்க வேண்டும். . .
மாற்றத்தின் மாட்சிமைக்கு,
அடங்காமல்,
மகிழ்ந்தாடும் கவிதைகளுக்கு,
கர்த்தா. . .
இந்த காதல் தானே,
அதன் ஆளுமைக்காக. . .

காதலிக்க வேண்டும். . .
வளம் பெற்ற காதலில் தானே,
கவிதைகள் பலம் பெறுகின்றன. . .
என் கவிதைகளின் எழுச்சிக்காக . . .

காதலிக்க வேண்டும் . . .

காதலிக்க வேண்டும். . .

Friday, May 22, 2009



feel very sad.. but nobody to comfort me up.... hopefully my best friend tears will accompany me all tis nite.............

Thursday, May 14, 2009

Yesterday 13.05.09

As usual today i have opened my tv and was watching the astro programmes... clock struck 9 then my hand has turned the channel to astro vaanavil... an in house programme called ivargalum herothan on air... Today's programme was on a life of blindman... the story has touched my heart... so i want to share this story with my friends here... The man is not blind by nature but have been slapped by his teacher when 8 years old.. so from tat time on he has been facing tis problem. Later when 11 years old he has been transfered to blind school and there is the place where he met his wife who is also a blind. They have married although has objection from their family but they have survived. They are gifted with 2 children and they are in a good position now. The man is still working goin to office and work as a telephone operator in a company although has been retired. this story has inpired me to not to be down in watever situation tis remind me the story of abraham lincoln who has been failed 49 times before turn to be a prime minister.. when people asked about tat he said if he won in his first attempt he woulndnt end up in tis position and will b stop there... wat an inspiring story... k bye

Monday, May 11, 2009

Tears

the days tat i am spending now is accomponied by tears... i dun kno to whom to tell and to cry out whatever i am facing now... i need sumone's shoulder to cry... i need sumone to wipe my tears.... i need sumone to be with me all the time... i need sumone to take care of me... i need sumone to love me and b with me life long.... but i kno it is impossible for me to search for tat person.... but i believe in faith and god.... pls do sumtin... i am dying nw........ plssss